இதையடுத்து டிக்கெட் விற்பனையை நேரடியாக நடத்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரயில் அமைச்சகம் கூறி வந்தது.
இந்த சூழலில் ரயில் டிக்கெட் விற்பனை கவுண்ட்டர்களை நாளை முதல் திறந்து நேரடி விற்பனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
டிக்கெட் கவுண்ட்டர்களை திறந்து நேரடி டிக்கெட் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
எனினும் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தேவைக்கு ஏற்ப, பகுதியின் நிலையை கவனத்தில் கொண்டு விற்பனை கவுண்ட்டர்கள் திறப்பது குறித்து முடிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் பொது சேவை மையங்கள், டிக்கெட் ஏஜெண்ட்களும் இனி விற்பனையை தொடங்கலாம். மக்கள் எளிதாக ரயில் டிக்கெட்களை பெற்று கொள்ளும் வகையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்!!
இந்த உத்தரவுகளுக்கு மத்தியில் ரயில் நிலையங்களில், டிக்கெட் விற்பனை நடத்தப்படும் இடங்களில் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
டிக்கெட் கவுண்ட்டர்களை திறந்து நேரடி டிக்கெட் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
எனினும் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தேவைக்கு ஏற்ப, பகுதியின் நிலையை கவனத்தில் கொண்டு விற்பனை கவுண்ட்டர்கள் திறப்பது குறித்து முடிவு செய்துக் கொள்ளலாம்.