திமுகவில் சாதிய பாகுபாடு இருப்பதாக, பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் மற்றும் மூத்தத் தலைவர் இல.கணேசன் முன்னிலையில், வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, தனது தம்பி முருகனை சந்தித்தது பாவச் செயலா என்றும், அதற்காக கட்சி பொறுப்பை பறிப்பதா என்றும் கேள்வி எழுப்பினார்.
"திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் திரு. அந்தியூர் ப.செல்வராஜ் MP அவர்கள் நியமனம்"
— DMK (@arivalayam) May 21, 2020
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.#DMK #MKStalin pic.twitter.com/lzCyVAPxJl
மேலும், மாநிலங்களவை பதவி கிடைக்காததால் திமுகவை விட்டு விலகியதாகக் கூறுவது சரியல்ல எனவும், பெரியாரும், கலைஞரும், அண்ணாவும் இருந்திருந்தால், கமலாலயத்திற்கு வந்து முருகனை பாராட்டியிருப்பார்கள் எனவும் வி.பி.துரைசாமி தெரிவித்தார். சிலர் சாதி, மத ஒழிப்பு குறித்து பேசிக் கொண்டு அதை வளர்த்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினர்.